search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்"

    ரபேல் போர் விமானம் தொடர்பாக டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்து பேசினர். #RafaleDeal #HAL #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) வழங்காமல் அனில் அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை மூடும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அந்த ஊழியர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

    இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ஊழியர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரபேல் போர் விமானங்களை தயாரிக்க நாங்கள் இப்போதும் தயாராக உள்ளோம். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது.

    போர் விமானங்களை தயாரிப்பதில் எந்த சிரமமும் எங்களுக்கு கிடையாது. உலகளாவிய தொழில்நுட்பத்தில் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம் தும்கூரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் சார்பில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் அங்கு நடக்கவில்லை” என்று தெரிவித்தனர்.   #RafaleDeal #HAL #RahulGandhi 
    இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவன விவகாரத்தில் காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை என நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். #NirmalaSitharaman #HAL #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஆர்டர் வழங்கி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பொய் தகவல் அளித்துள்ளார். அந்த நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் கூட கொடுக்க முடியாமல் பலவீனப்படுத்தி அங்கு பணியாற்றும் ஊழியர்களை அனில் அம்பானி நிறுவனத்துக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

    இது குறித்து ஆதாரங்களை நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

    இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியது. அப்போது காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அவை தவறாக வழி நடத்துபவையாக இருக்கின்றன. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துக்கு சுமார் ரூ.26 ஆயிரம் கோடி அளவுக்கு ஆர்டர் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகி விட்டன.

    தற்போது ரூ.73 ஆயிரம் கோடி மதிப்பில் கொள்முதல் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆர்டர் பெற்றதற்கான உறுதி பத்திரம் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #NirmalaSitharaman #HAL #Congress #RahulGandhi 
    ×